என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஈரான் பயிற்சியாளர்
நீங்கள் தேடியது "ஈரான் பயிற்சியாளர்"
ஆசிய விளையாட்டு பெண்கள் கபடியில் ஈரான் அணி தங்கம் வெல்ல இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளரே முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். #AsianGames2018
ஜகார்தா:
ஆசிய விளையாட்டு கபடியில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு ஈரான் முடிவு கட்டியது.
இதுவரை நடந்த அனைத்து கபடி போட்டியிலும் தங்கம் கிடைத்தது. அதாவது ஆண்கள் பிரிவில் 7 தங்கமும், பெண்கள் பிரிவில் 2 தங்கமும் தொடர்ச்சியாக கிடைத்தது.
இந்த ஆசிய விளையாட்டில் போட்டியில் கபடி மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆண்கள் அணி நேற்று முன்தினம் அரை இறுதியில் ஈரானிடம் தோற்றது. இதனால் வெண்கல பதக்கம் கிடைத்தது.
இதேபோல பெண்கள் கபடி அணியும் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஈரானிடம் 24-27 என்ற கணக்கில் தோற்று ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை தவறவிட்டது. வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
பெண்கள் கபடியில் ஈரான் அணி தங்கம் வெல்ல இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளரே முக்கிய காரணமாக திகழ்ந்தார். மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஷைல்ஜா ஜெயின் கடந்த 18 மாதங்களாக ஈரான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஈரான் அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்த ஷைல்ஜா கூறியதாவது:-
ஈரான் அணிக்கு நான் பொறுப்பை ஏற்றபோது இது எனது பணி. சிறந்த பயிற்சியாளர் என என்னை நிரூபிப்பேன் என்று கூறினேன். அதற்கான முடிவுகளை தற்போது நாங்கள் கொடுத்துள்ளோம்.
பணியில் சேர்ந்த போது மொழி பிரச்சினை காரணமாக வீராங்கனைகளுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வது கடினமாக இருந்தது. இதனால் பார்சி மொழி கற்றேன்.
இறுதி ஆட்டத்தில் முதல் 5 நிமிடங்களுக்கு பிறகு எங்களது டிபன்ஸ் மிகவும் சிறப்பாக இருந்தது. இதுவே வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.
மேலும் எங்கள் அணியின் 3 ரைடர்கள் அற்புதமாக செயல்பட்டனர். ஆட்டம் தொடங்கும் முன்பு நான் வீராங்கனைகளிடம் கூறியது ஒன்றே ஒன்று தான். அது தங்கப்பதக்கம் இல்லாமல் என்னை இந்தியா அனுப்பி வைத்து விடாதீர்கள் என்பது தான்.
இறுதிபோட்டி எனக்கும், ஈரான் அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த ஈரான் கபடி சங்கத்துக்கு என்றும் நன்றியுடைவராக நான் இருப்பேன்.
இந்தியா தோல்வி அடைந்தது எனக்கு வருத்தம் தான். மற்ற இந்தியர்களை போன்றே நானும் எனது நாட்டை நேசிக்கிறேன். ஆனால் கபடியையும் நான் நேசிக்கிறேன்.
ஈரான் அணியை பற்றி மட்டுமே நான் சிந்திக்க முடியும். ஈரான் வீராங்கனைகளுக்கு தந்திரங்கள் மற்றும் யூக்திகள் குறித்து மட்டுமே கற்றுக்கொடுத்தேன். உடற்தகுதி தொடர்பாக நான் அவர்களுக்கு எந்தவித பயிற்சிகளையும் அளிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே உயர்மட்ட அளவிலான உடற்தகுதியுடனே இருந்தார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AsianGames2018
ஆசிய விளையாட்டு கபடியில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு ஈரான் முடிவு கட்டியது.
இதுவரை நடந்த அனைத்து கபடி போட்டியிலும் தங்கம் கிடைத்தது. அதாவது ஆண்கள் பிரிவில் 7 தங்கமும், பெண்கள் பிரிவில் 2 தங்கமும் தொடர்ச்சியாக கிடைத்தது.
இந்த ஆசிய விளையாட்டில் போட்டியில் கபடி மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆண்கள் அணி நேற்று முன்தினம் அரை இறுதியில் ஈரானிடம் தோற்றது. இதனால் வெண்கல பதக்கம் கிடைத்தது.
இதேபோல பெண்கள் கபடி அணியும் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஈரானிடம் 24-27 என்ற கணக்கில் தோற்று ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை தவறவிட்டது. வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
பெண்கள் கபடியில் ஈரான் அணி தங்கம் வெல்ல இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளரே முக்கிய காரணமாக திகழ்ந்தார். மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஷைல்ஜா ஜெயின் கடந்த 18 மாதங்களாக ஈரான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஈரான் அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்த ஷைல்ஜா கூறியதாவது:-
ஈரான் அணிக்கு நான் பொறுப்பை ஏற்றபோது இது எனது பணி. சிறந்த பயிற்சியாளர் என என்னை நிரூபிப்பேன் என்று கூறினேன். அதற்கான முடிவுகளை தற்போது நாங்கள் கொடுத்துள்ளோம்.
பணியில் சேர்ந்த போது மொழி பிரச்சினை காரணமாக வீராங்கனைகளுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வது கடினமாக இருந்தது. இதனால் பார்சி மொழி கற்றேன்.
இறுதி ஆட்டத்தில் முதல் 5 நிமிடங்களுக்கு பிறகு எங்களது டிபன்ஸ் மிகவும் சிறப்பாக இருந்தது. இதுவே வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.
மேலும் எங்கள் அணியின் 3 ரைடர்கள் அற்புதமாக செயல்பட்டனர். ஆட்டம் தொடங்கும் முன்பு நான் வீராங்கனைகளிடம் கூறியது ஒன்றே ஒன்று தான். அது தங்கப்பதக்கம் இல்லாமல் என்னை இந்தியா அனுப்பி வைத்து விடாதீர்கள் என்பது தான்.
அப்போது சில வீராங்கனைகள் என்னிடம் வந்து நீங்கள் எதை விரும்புனீர்களோ அதை நிச்சயம் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்றார்கள்.
இறுதிபோட்டி எனக்கும், ஈரான் அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த ஈரான் கபடி சங்கத்துக்கு என்றும் நன்றியுடைவராக நான் இருப்பேன்.
இந்தியா தோல்வி அடைந்தது எனக்கு வருத்தம் தான். மற்ற இந்தியர்களை போன்றே நானும் எனது நாட்டை நேசிக்கிறேன். ஆனால் கபடியையும் நான் நேசிக்கிறேன்.
ஈரான் அணியை பற்றி மட்டுமே நான் சிந்திக்க முடியும். ஈரான் வீராங்கனைகளுக்கு தந்திரங்கள் மற்றும் யூக்திகள் குறித்து மட்டுமே கற்றுக்கொடுத்தேன். உடற்தகுதி தொடர்பாக நான் அவர்களுக்கு எந்தவித பயிற்சிகளையும் அளிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே உயர்மட்ட அளவிலான உடற்தகுதியுடனே இருந்தார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AsianGames2018
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X